விளையாட்டு

நாளையுடன் முடிவடையும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 26ந் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

வெற்றிகரமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது. 15வது நாளான இன்று 39 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது. ரோடு சைக்கிளிங், மல்யுத்தம் (தலா 3 தங்கம்), தடகளம், வாட்டர் போலோ, கூடைப்பந்து, ஹேண்ட்பால், மாடர்ன் பெண்டத்லான், கைப்பந்து, பளு தூக்குதல் (தலா 1 தங்கம்) ஆகிய விளையாட்டுக்கள் கடைசி நாளில் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!