இந்தியா செய்தி

வைத்தியரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாதி

இந்தியாவின் பீகாரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு (11) , தன்னை பலா த்காரம் செய்யவந்தவரின் அந்தரங்க உறுப்பை தாதி அறு த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலா த்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துள்ளார்.

அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை பலா த்காரம் செய்ய முடிவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மருத்துவர் அணைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் அமபலமாகியுள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து அந்த உபயோகித்த பிளேட், இரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், மதுபான போத்தல்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பலா த்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content