பொழுதுபோக்கு

காதலரை கரம் படித்தார் பிரபல தமிழ் நடிகை… யார் தெரியுமா?

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக அறிவித்துள்ளார். தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு திருமணமாக உள்ள தகவலையும் வெளியிட்டுள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.

அவர் கெளதம் ஜார்ஜ் என்கிற ஒளிப்பதிவாளரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி மற்றும் பாவனா நடித்த தி டோர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் கெளதம் ஜார்ஜ்.

கெளதம் ஜார்ஜை காதலித்து வந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், குடும்பத்தினர் சம்மதத்தோடு அவரை கரம்பிடிக்க தயாராகி வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது.

அப்போது கெளதம் ஜார்ஜ் உடன் லிப் கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள தன்யா, ஒரு முத்தம், ஒரு வாக்குறுதிக்கு தான் ஒவ்வொரு ஃபிரேமும் வழிவகுக்கிறது. என்றென்றும்.. எப்போதும் என கெளதம் ஜார்ஜின் பெயரை குறிப்பிட்டு ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார் தன்யா. அவரின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content