‘தமிழர் பிரச்சினை’ – மனோ, அநுர நேரடி சந்திப்பு!
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் Mano Ganesan ஆகியோருக்கு இடையில் இன்று (17) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
“ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக கூறி இருந்தார்.
இதையடுத்தே இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதற்கமைய அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி TPA தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.





