உலகம் செய்தி

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தாய்லாந்து விசா கட்டுப்பாடு

  • May 19, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசு தனது விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இனி 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மீண்டும் வளர்ச்சியடையச் செய்வதற்காக, 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2024 ஜூலை முதல் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த 60 நாள் விசா விலக்கு திட்டத்தை ரத்து […]

உலகம் செய்தி

காசா நோக்கிச் சென்ற உதவிப் படகுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – பல நாடுகள் கண்டனம்

  • May 19, 2026
  • 0 Comments

காசாவை நோக்கிச் சென்ற உதவிப் படகுக் குழுவில் இருந்த 41 படகுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாக அமைப்பாளர்கள்  தெரிவித்துள்ளனர். மேலும், 10 படகுகள் இன்னும் காசாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் தகவலின்படி, அந்தப் படகுகள் காசாவிலிருந்து சுமார் 121 கடல் மைல்கள் தொலைவில் இருந்தன. காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கடந்த வாரம் துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகள் புறப்பட்டிருந்தன. சைப்ரஸ் கடற்கரைக்கு அருகிலுள்ள […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிந்தவூரில் துப்புரவுப் பணிகள் தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் […]

உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க […]

இலங்கை செய்தி

மீனவ பிரச்சினைக்கு விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் கோரிக்கை

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடல் வளங்களை அழிப்பதுடன், […]

இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • May 19, 2026
  • 0 Comments

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர். கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் […]

ஐரோப்பா செய்தி

சேனல் 4 நிகழ்ச்சியில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் – விசாரணை தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

சேனல் 4-இன் ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்’ (Married at First Sight ) UK நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகவலை வெளியிட்டுள்ளது. பிபிசி பனோரமா விசாரணையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண் தனது சம்மதம் இல்லாத பாலியல் செயலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நலனில் ஒளிபரப்பாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா

  • May 19, 2026
  • 0 Comments

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் கூறிய அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “தமிழ்நாடு […]

ஐரோப்பா செய்தி

எபோலா தொற்றுதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் – லண்டன் தொற்று நோய் பகுப்பாய்வு மையம்

  • May 19, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை சுமார்131 பேர் உயிரிழந்துள்ளதுடன், 513 க்கும் மேற்பட்ட தொற்றுகள் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள எம்ஆர்சி தொற்று நோய் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட ஆய்வில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறியாதது, […]

செய்தி தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க அனுமதி

  • May 19, 2026
  • 0 Comments

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், […]

error: Content is protected !!