உலகம் செய்தி

வரலாற்றை முன்வைத்து அமெரிக்காவுக்கு பதிலடி தரும் ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தின் வரலாற்று குறிப்புகளை அரசியல் செய்தியாக பயன்படுத்தி வருகின்றன. ஈரானிய அதிகாரிகள், “இறுதியில் பலவீனமானவரே வெற்றி பெறுவார்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் வரலாற்றிலிருந்து முக்கிய நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகர்களுக்கு […]

உலகம் செய்தி

எதிர்ப்பை குற்றமாக்க வேண்டாம் – லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லா தலைவர் அழைப்பு

  • May 24, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் Naim Qassem, “எதிர்ப்பை குற்றமாக்கும் வகையில் லெபனான் அரசு எடுத்துள்ள முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒன்பது பேருக்கு எதிராக  அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் “எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடைகள் குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்காததற்காக பெய்ரூட் அரசையும் அவர் விமர்சித்தார். அதேவேளை, லெபனானை ஆக்கிரமிப்பதே இஸ்ரேல் […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் – மீண்டும் உறுதியளித்த  ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என ஜனாதிபதி Masoud Pezeshkian உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்த உறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராகவும் திறந்த மனதுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் உடனடி முடிவுகள் அல்லாமல், படிப்படியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. தற்போது அனைத்து தரப்பினரின் கவனமும், குறிப்பாக தெற்கு லெபனானில் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை எட்டுவதிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்பு – 09 பேருக்கு பஹ்ரைனில் ஆயுள் தண்டனை

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உடன் தொடர்பு வைத்து பஹ்ரைனுக்கு எதிராக “விரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கிய இணையதளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்ததுடன், அதனுடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்களுக்கும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகம் செய்தி

லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

  • May 24, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் […]

உலகம் செய்தி

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 33 கப்பல்கள் பயணம்

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 33 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் பாகாயி கூறினார். இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தம் “பெரும்பாலும்  முடிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விவரங்கள் விரைவில் […]

ஐரோப்பா செய்தி

ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். அதேவேளை, ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பிராந்திய மோதல்களை உண்மையாக தணிக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

error: Content is protected !!