இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

  • May 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை மொத்தமாக 1,010,807 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரை மட்டும் 134,530 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் […]

உலகம் செய்தி

போலி வெற்றிக்காக தகவல் திரிப்பு – ட்ரம்பின் ஒப்பந்தக் கூற்றுகள் ஈரானால் நிராகரிப்பு

  • May 29, 2026
  • 0 Comments

ஈரானுடனான சாத்தியமான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துகளை, ஈரானிய வட்டாரங்கள் சந்தேகத்துடன் எதிர்கொண்டுள்ளன. ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான Fars News Agency வெளியிட்ட தகவலின்படி, “நம்பகமான வட்டாரங்கள்” ட்ரம்பின் அறிக்கையை “உண்மையும் பொய்யும் கலந்த ஒன்று” என்று விமர்சித்துள்ளன. Truth Social தளத்தில் வெளியிட்ட தனது பதிவில், ட்ரம்ப் வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும், அது ஒரு “போலி வெற்றியை” உருவாக்கும் முயற்சி என்றும் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் எந்த இறுதி ஒப்பந்தமும் இல்லை – ஈரான் விளக்கம்

  • May 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இதுவரை எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்த முடிவுகள் குறித்து ஈரானும் ஓமானுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான மேலதிக […]

உலகம் செய்தி

ருமேனியாவில் குடியிருப்பில் மோதிய ட்ரோன்: இருவர் காயம் – ரஷ்யாவுக்கு நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ருமேனியாவின் கிழக்கு பகுதியிலுள்ள கலாட்டி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்ய ஆளில்லா விமானம் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேட்டோ பொதுச்செயலாளர், “ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கை அனைவருக்கும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத் தலைவர், “மாஸ்கோவின் ஆக்கிரமிப்புப் போர் இன்னொரு எல்லையைத் தாண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகளையும் மீறி அல்-அக்ஸாவில் 60,000 பலஸ்தீனியர்கள் தொழுகை

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 60,000 பலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை அல்-அக்ஸா மசூதியில் தொழுகையில் கலந்துகொண்டனர். ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் மசூதி வளாக நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்ததாக இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மசூதி முற்றங்களுக்கு வரத் தொடங்கினர். பழைய நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதுடன், மசூதி வாயில்கள் மற்றும் ஜெருசலேம் சுற்றியுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டாளர்களின் அடையாள அட்டைகள் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திலும் லெபனானில் 15 குழந்தைகள் உயிரிழப்பு – யுனிசெஃப் அதிர்ச்சி

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 62 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் இதுகுறித்து தகவல் வெளியிட்டார். “கடந்த ஏழு நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம் – மேலும் லெபனான் மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அன்சாரியா, அல்-க்ராயெப், ஷப்ரிஹா, சரஃபந்த், அட்லூன் மற்றும் பைசாரியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக “ஸஹ்ரானி நதிக்கு வடக்கே செல்ல வேண்டும்” என்று இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அதனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் தரப்பு அறிக்கையில் […]

உலகம் செய்தி

ஹெப்ரோனில் இப்ராஹிமி மசூதி மூடல் – இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி மசூதியை இஸ்ரேலியப் படைகள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியில் தொழுகை செய்தவர்களையும், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய வீரர்கள் உத்தரவிட்டதாக மசூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் நுழைவாயில்களும் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து பலஸ்தீனத்தின் வக்ஃப் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகம் […]

உலகம் செய்தி

போர்நிறுத்த மீறல் – காசா தாக்குதல்களுக்கு பலஸ்தீன் கடும் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை பலஸ்தீன அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்கள் “அழித்தொழிப்பு, படுகொலை மற்றும் நாசவேலைப் போர்” என அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது சர்வதேச சட்டங்களையும், போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளையும் வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் மற்றும் உத்தரவாத நாடுகள், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, பலஸ்தீன மக்களுக்கு எதிரான […]

உலகம் செய்தி

மீண்டும் போர் தொடுக்க வேண்டாம்- அமெரிக்கா, ஈரானுக்கு ரஷ்யா அழைப்பு

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ மோதலுக்குள் செல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா  தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக மாஸ்கோ தனது யோசனைகளை யார்மீதும் திணிக்கவில்லை என்றும் அவர்  கூறினார். மறுபுறம், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!