ஆண்ட்ரூ தொடர்பான 30,000 மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்கு வழங்கப்பட்டதாக தகவல்
பிரிட்டன் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வழங்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில், ரகசிய அரசாங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் தகவல்களும், சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களும் அடங்கிய சுமார் 30,000 மின்னஞ்சல்கள் 2020 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லினிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூவின் […]










