உலகம் செய்தி

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம் வெற்றி பெற விரும்புவதால், ஈரானின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், நிதித்துறைச் செயலாளர் Scott Bessent இதுவரை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ஈரானின் நாணய மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பணவீக்கம் சுமார் 150% வரை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு வார்த்தை

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது முக்கியமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது குறித்து உரையாடல் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். இந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகம் செய்தி

ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

வர்த்தகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டால், அமெரிக்கா “அளவற்ற ஆயுத பலத்தை” பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய கடற்படை நடவடிக்கையான “ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” மூலம் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்காவிலிருந்து உலகிற்கு ஒரு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் விவகாரம் – கபில சந்திரசேனவுக்கு பிணை

  • May 5, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை  பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு […]

உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே பரஸ்பர தாக்குதல்

  • May 5, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் உள்ள அல்-மன்சூரி (al-Mansouri)மற்றும் காகாயித் அல்-ஜிஸ்ர் (Qaaqaait al-Jisr)நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா அமைப்பு பிய்யாதா (Biyyada) பகுதியில் இஸ்ரேலிய பீரங்கி இலக்குகளை ஏவுகணையால் தாக்கியதாக கூறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. முதலில் 10 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட போர் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் விவகாரம் – ட்ரம்ப்பை கண்காணித்து வருவதாக தென் கொரியா அறிவிப்பு

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீர்வழிப் போக்குவரத்து குறித்த ட்ரம்பின் கருத்துக்களைக் கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. “சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்” என தென் கொரியாவின் ஜனாதிபதி செயலாளர் சோய் சௌங்-ஆ கூறுகிறார். “இது தொடர்பான ஜனாதிபதி ட்ரம்பின் கருத்தை சியோல் கண்காணித்து வருகிறது” என்று சோய் ரொய்ட்டர்ஸிற்கு தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் நேற்று தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தைத் […]

உலகம் செய்தி

கப்பல் போக்குவரத்து மிகவும் ஆபத்தானது ஹோர்முஸ் வழித்தடம் குறித்து ஈரான் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உள்ள முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை குறித்து புதிய பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய கப்பல் வழித்தடம் பாதுகாப்பானதல்ல. அந்தப் பகுதி “பாறைகள் நிறைந்தது, ஆழமற்றது மற்றும் மிகவும் ஆபத்தானது” என்று ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீர்வழிப் பாதை சுமார் மூடப்பட்ட நிலைக்கு வந்ததால், உலக எரிபொருள் சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்து, உலக பொருளாதாரத்தில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி உறுதி 

  • May 5, 2026
  • 0 Comments

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் தாம் இன்னும் உறுதியாக உள்ளதாக  ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சி தலைவர் அனாஸ் சர்வர் (Anas Sarwar) தெரிவித்துள்ளார். பெப்ரவரியில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டார்மர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். தற்போது அதிலிருந்து தாம் “ஒரு கணமும் பின்வாங்கவில்லை” என அவர் கூறியுள்ளார். மே 07ஆம் திகதி நடைபெறவுள்ள ஹோலிரூட் தேர்தலை முன்னிட்டு, ஸ்டார்மரிடமிருந்து அரசியல் ரீதியாக […]

இலங்கை செய்தி

தளபதியின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழில் உணவு பொதிகள் 

  • May 5, 2026
  • 0 Comments

இளைய தளபதி விஜயின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை சீர்குலைக்கும் ஈரானின் எந்த முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது

  • May 5, 2026
  • 0 Comments

பிரித்தானிய சமூகத்தை சீர்குலைக்க ஈரான் மேற்கொள்ளும் எந்த முயற்சியையையும் சகித்துக்கொள்ள முடியாது என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்-இல் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். வடக்கு லண்டன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் இந்த மாநாட்டில் உரையாற்றினார். கடந்த புதன்கிழமை கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூத ஆண்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகினர். அதே […]

error: Content is protected !!