ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து விவாதிக்க விருப்பமில்லை – ஸ்டார்மர்

  • May 18, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். Wes Streeting மற்றும் Andy Burnham ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் ஸ்டார்மர் இதைத் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முற்றிலும் மறுசீரமைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பிரித்தானிய வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் […]

உலகம் செய்தி

சவூதி மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து ஈராக் விசாரணை

  • May 18, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக் எல்லைக்குள் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், அதன் சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருவதாக ஈராக் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், நாட்டின் வான்வெளியில் ட்ரோன் ஏவப்பட்டதை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய ஈராக், இதுதொடர்பாக சவூதி அரேபியாவுடன் […]

ஐரோப்பா செய்தி

பதவி விலகும் கால அட்டவணை இல்லை – ஸ்டார்மர் மீண்டும் திட்டவட்டம்

  • May 18, 2026
  • 0 Comments

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் Andy Burnham வெற்றி பெற்றாலும், தாம் பதவி விலகுவதற்கான எந்த கால அட்டவணையையும் வெளியிடப் போவதில்லை என பிரதமர் Keir Starmer தெரிவித்துள்ளார். உஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை இன்று கூறினார். மேலும், இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் எவராக இருந்தாலும் அவருக்கு 100 வீத ஆதரவு வழங்கும் தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். கட்சியின் திசை குறித்து யாருக்கென்ன கருத்து இருந்தாலும், அதை ஒதுக்கிவைத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் குற்றச்செயல்கனைத் தடுக்க நிதி ஒதுக்கீடு

  • May 18, 2026
  • 0 Comments

சமூக விரோத நடத்தை, மீண்டும் குற்றம் புரிதல் மற்றும் பிற குற்றச் செயல்களைத் தடுக்கும் திட்டங்களுக்காக £1.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இந்த நிதி, பர்மிங்காம் (Birmingham), கோவென்ட்ரி (Coventry), டட்லி (Dudley), சாண்ட்வெல் (Sandwell), சோலிஹல்(Solihull), வால்சால் (Walsall) மற்றும் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 66 திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால தலையீடுகள் மூலம் குற்றங்களை குறைப்பதில் தாம் உறுதியாக உள்ளதாக மேற்கு […]

இலங்கை செய்தி

வெள்ளவத்தை நினைவேந்தல் நிகழ்வில் இடையூறு விளைவிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று மாலை 05 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், கடற்கரையில் பூக்களை வீசி, உயிரிழந்த பொதுமக்களுக்கு இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அங்கு கலகமடக்கும் பொலிஸார் உட்பட பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிலர் மாத்திரம் நிகழ்வில் குழப்ப முயற்சித்ததாகவும் நிகழ்வில் பங்குபற்றியவர்களைத் தகாத வார்த்தைகளால் […]

இலங்கை செய்தி

இலங்கையின் 2026 வளர்ச்சி இலக்கு குறித்து சந்தேகம்?

  • May 18, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 05 வீதமாக காணப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது துல்லியமான கணிப்பை வழங்குவது கடினமாக உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீத அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, […]

இலங்கை செய்தி

யுத்த வீரர்கள் நினைவு தினம் – முப்படையைச் சேர்ந்த 5,289 பேருக்கு பதவி உயர்வு

  • May 18, 2026
  • 0 Comments

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், அனுஷ்டிக்கப்படுகிறது. முப்படைத் தளபதிகளின் […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரதமர் லண்டன் நோக்கி பயணமானார்

  • May 18, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார். லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் அமெரிக்கர்களும் பாதிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் சுமார் ஆறு அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய்ப் பரவலை உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் 91 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த நோயால் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக கொங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொங்கோவில் உள்ள சிறிய அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மையத்துக்கு மாற்ற […]

செய்தி தமிழ்நாடு

மின் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

  • May 18, 2026
  • 0 Comments

தமிழகத்தின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கோடை காலத்தில் மின்சாரம் போதுமான அளவில் உள்ளதா, வெளிமாநிலங்களில் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும், மின்தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கலந்துரையாடினார். தமிழ்நாட்டின் […]

error: Content is protected !!