செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமநிலையில் முடிவு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில், அதிரடியாக விளையாடிய தசுன் ஷானக(Dasun Shanaka) 34 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 30 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், 161 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், சல்மன் அஹா(Salman Agha) 46 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தார்.

இறுதியில், 1-1 என்ற கணக்கில் இந்த டி20 தொடர் சமநிலையில் முடிந்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!