பொழுதுபோக்கு

திரிஷா – விஜய் குறித்து மீண்டும் பஞ்சாயத்தை ஆரம்பித்த சுசித்ரா

பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் சுசித்ரா மீண்டும் சர்ச்சையாக பேச ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

“நடிகை திரிஷா ஒரு ஒட்டுண்ணி. அரசியலில் இறங்கியிருக்கும் விஜய் அதில் ஜொலிக்க வேண்டும் என்றால் அவர் முதலில் தன் குடும்பத்துடன் இணைய வேண்டும். அப்பாவுடன் சேர வேண்டும். முக்கியமாக சங்கீதாவுடன் இணைய வேண்டும். எம்ஜிஆரிடமிருந்து ஜெயலலிதா எப்படி கட்சியை பிடுங்கினாரோ அதேபோல் திரிஷா விஜய்க்கு செய்வார்” என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை போய்க்கொண்டிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என்பதே விஜய் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அதேபோல் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திரிஷா பகிர்ந்திருந்த புகைப்படத்தை வைத்தும் ஒரு சிலர் பெரும் வதந்தியையும், கிசுகிசுவையும் கிளப்பிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்