பொழுதுபோக்கு

போதைப்பொருளுடன் சிக்கிய சுந்தரி சீரியல் நடிகை…

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிவதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் அவ்வப்போது திடீர் சோதனைகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடைபெற்றது.

மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அவ்வப்போது கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சன் டிவி.யில் தினமும் 7 மணிக்கு ஒளிபரப்படும் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் போதை பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மீனாவிடம் சோதனையிட்ட போது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. ..

இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Visited 86 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்