இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 27 அங்குலம் நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தில் பாதுகாப்புடன் இடம்பெற்று வருவதாகவும், அரச அலுவலகங்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம் வாக்காளர் அட்டைகளின் அச்சிடல் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

தற்போது தேர்தல் வன்முறைகள் குறைந்த மட்டத்திலேயே இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்ட அவர் இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து பேண உதவுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!