சீன ஜனாதிபதியை சந்தித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன நேரப்படி இன்று மாலை 05.00 மணிக்கு ஆரம்பமானது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)