இலங்கை

இலங்கையில் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்

மீரிகம, ரேந்தபொல பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று மதியம் இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறைத் தொடர்ந்து இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் ரேந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!