பொழுதுபோக்கு

புஷ்பா 2 பேரிழப்பு – அதிகாலை காட்சிக்கு தடை விதித்து தெலுங்கானா அதிரடி

அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று புஷ்பா 2 வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதனாலேயே நேற்று படத்தை காண ரசிகர்களின் கூட்டம் தியேட்டரில் அலை மோதியது. அதேபோல் இரவு 10:30 மணிக்கு சிறப்பு காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.

அது மட்டும் இன்றி அதை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். அதுதான் மிகப்பெரும் சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது விமர்சனமான நிலையில் தற்போது தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தெலுங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர்.

அம்மாநில அமைச்சர் கோமதி ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படித்தான் தமிழ்நாட்டிலும் துணிவு படத்தின் ரிலீஸ் போது உயிH இழப்பு ஏற்பட்டது.

படத்தை காண வந்த ரசிகர் லாரி மீது ஏறி ஆடும் போது தவறி விழுந்து பலியானார். அதன் பிறகு தமிழக அரசு இனி அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடையாது. காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என அறிவித்தது.

ஆனால் மற்ற மாநிலங்களில் நள்ளிரவு காட்சி அதிகாலை காட்சி என சிறப்பு காட்சிகள் நடந்தது. தற்போது ஏற்பட்ட உயிரிழப்பால் தெலுங்கானா மாநிலமும் தமிழ்நாடு போல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!