பொழுதுபோக்கு

“என்னை அந்த இடத்தில் பிடித்தார்” பாலிவுட் நடிகை பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தனக்கு நடந்த பாலியல் வன்புணர்வு அனுபவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாவரியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம்.

கடைசியாக இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோயா பேக்டர் என்ற படம் வெளியாகியிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூருக்கும் ஆனந்த் அஹுஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சிறுவயதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சோனம் கபூர் கடந்த 2016 ஆம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

அதில், எல்லோரும் சிறுவயதில் ஏதோ ஒருவகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னை நிலை குலைய செய்தது.

மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அப்போது இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக சென்றபோது கூட்டநெரிசலில் ஒருவர் எனது மார்பகங்களை பிடித்தார். இதனால் அதிர்ச்சியானேன். என் கை, கால்கள் நடுங்கி அழ ஆரம்பித்தேன்.

பல வருடங்களாக இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் நானே தவறு செய்ததுபோல உணர்ந்தேன். இதனால் இதை யாரிடமும் கூறவில்லை.

ஆனால் நான் இப்போது பக்குவமடைந்து விட்டேன். இப்போது அதை நினைத்தாலும் நான்படும் வேதனையை கூற முடியாது. இதில் என்னுடைய தவறு எதும் இல்லை என்பதை உணரவே நாளாகி விட்டது. என்று கூறியுள்ளார்.

 

(Visited 12 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content