ஜப்பானில் ரயிலை நிறுத்திய பாம்பு – அதிவேக ரயில் சேவைக்கு ஏற்பட்ட பாதிப்பு

ஜப்பானின் மிகப் பரபரப்பான அதிவேக ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
பாம்பு ஒன்று மின்சார விநியோகக் கம்பிவடத்தில் சிக்கிக்கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை சுமார் 5.25 மணிக்குத் டோக்கியோவுக்கும் ஒசாகாவிற்கும் இடையே ஓடும் அதிவேக ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இரவு 7 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடர்ந்துள்ளது. அதிகாரிகள் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயணிகள் ரயில் நிலையத்தில் கூடியதாகக் கூறப்படுகிறது.
ரயில் நுழைவுச்சீட்டுகளைப் பெறும் இயந்திரங்களிலும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 7 times, 7 visits today)