செய்தி விளையாட்டு

SLvsENG – முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 21ம் தேதி தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிலன் ரத்னாயகே 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து காயம் காரணமாக வெளியேறிய சண்டிமால் கமிந்து மென்டிசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் இலங்கை 300 ரன்களை கடந்தது. அரைசதம் அடித்த சண்டிமால் 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அபாரமாக விளையாடிய கமிந்து மென்டிஸ் சதமடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இலங்கை 2வது இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது.

இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ரூட் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த.

இலங்கை அணி சார்பில் அசித்த மிரட்டும் ஜயசூரிய தலா இரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29ம் திகதி லண்டன் லோர்ட்ஸில் நடைபெறவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content