ஆபரேஷன் ‘சிந்தூர்’ : மோடிக்கு ரஜினி பாராட்டு

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியா 9 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது.
மேலும் இந்த ஆப்ரேஷனுக்கு பல பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் இந்திய ராணுவ படைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதேபோல் ரஜினியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார். அதில் மோடி மற்றும் அமித்ஷா இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதோடு போராளியின் சண்டை தொடங்கிய விட்டது. இலக்கை அடையும்வரை நிறுத்த போவதில்லை, முழு தேசமும் உங்களுடன் நிற்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது. மேலும் இப்போது இதனால் பதற்றமான சூழ்நிலை வருவதால் இந்திய ராணுவ படை எல்லாவற்றிற்கும் தயாராகவும் இருக்கிறது.