இலங்கை

பெரஹர யானை மீது துப்பாக்கிச் சூடு: வனவிலங்கு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹர நிகழ்வில் கலந்து கொண்ட பெண் யானையொன்று வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளது.

குறித்த அதிகாரி மாபாகட வெவ வனஜீவராசிகள் காரியாலயத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஆவார்.

சம்பவத்ததையடுத்து மஹியங்கனை பொலிஸார் வனவிலங்கு அதிகாரியை கைது செய்துள்ளனர்.

மகாவலி ஆற்றங்கரையில் சங்கிலியுடன் காணப்பட்ட பெண் யானையை காட்டு யானை எனத் தவறாகக் கருதி வனஜீவராசி அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த யானைக்கு வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!