உலகம்

செக் குடியரசின் தலைநகர் பிறாகில் துப்பாக்கிச்சூடு : வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

செக் தலைநகர் பிறாகில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று (22.12) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் வெளிநாட்டினரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்களில் இரு சவுதி அரேபிய பிரஜைகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிதாரியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடம் பொலிசாரால் சீல் வைக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக தலைமையகம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி இரங்கல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 25 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!