பொழுதுபோக்கு

சல்மான் கானைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்… பாலிவுட்டில் பரபரப்பு

ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்களாக பல ஆண்டுகளாக பாலிவுட்டில் இருந்து வருகின்றனர்.

சல்மான்கானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலையடுத்து அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

சில கோடிகளை கேட்டு அவருக்கு இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஷாருக்கானிற்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதமேந்திய 6 போலீசார் 24 மணிநேரமும் இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ஃபைசான் கான் என்பவர் இந்த கொலை மிரட்டலை அவரது தொலைபேசி மூலம் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த செல்போன் நம்பரை வைத்து அவரை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து ஷாருக்கானுக்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

(Visited 57 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்