பொழுதுபோக்கு

“கதை இருந்தால் படம் ஓடும்..” புதிய திரைப்படத்தின் பூஜையில் நடிகர் செந்தில் பேட்டி

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் செந்தில் புதிதாக நடிக்கும் படத்தின் பட பூஜை விழா போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கள் பகுதியில் நடைபெற்றது.

இதில் நடிகர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய படத்திற்கான பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்,

சிறிய படம் பெரிய படம் என்று நான் பார்ப்பதில்லை. படத்தில் கதை இருந்தால் அந்த படம் ஓடும். மேலும் தற்போது நடிக்கக்கூடிய படத்தின் கதை என்ன? கதாபாத்திரம் என்ன? என கேட்டபோது சிரித்தபடியே கதை சொல்லவில்லை படம் எடுத்த பிறகுதான் தெரியும் என அவர் பானியில் நகைச்சுவையாக கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அரசியல் குறித்த கேள்விக்கு பதில் கூற நடிகர் செந்தில் மறுத்து விட்டார். தற்போது கவுண்டமணி தனியாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் செந்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் தனியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

90, 80 காலப்பகுதிகளில் கவுண்டமணி – செந்தில் காமெடிகள் இல்லாத படம் இருக்காது என்றே கூறலாம். அந்த காலத்தில்இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்றால் மிகையாகாது…

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!