சௌவுதி அரேபியாவில் 17 நாடுகளை சேர்ந்தவர்களுக்கான தொழிலாளர் விசா நிறுத்தம்!
17 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக தொழிலாளர் விசாவை சௌவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை ஏற்கனவே குறுகிய கால திட்டங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை பாதித்துள்ளது.
இது தொடர்பில் அராசங்கத்திடம் இருந்து முறையான பொது அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், குடியேற்ற பயிற்சியாளர்கள் மற்றும் முதலாளிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது செயற்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அல்ஜீரியா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், ஜோர்டான், லிபியா, மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சோமாலியா, சூடான், துனிசியா, துருக்கி, ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்காலிக வேலை விசாக்கள் நீண்ட காலம் தங்குவதற்கு அல்லது முறைசாரா வேலைகளுக்கு தவறாக பயன்படுத்தப்படுவது இனங்காணப்பட்டுள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





