பொழுதுபோக்கு

நான் செகன்ட் ஹேண்ட்டா? விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சமந்தா சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக அறிவித்தனர் நாக சைதன்யாவும், சமந்தாவும்.

அவர்களின் விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர்களின் பிரிவுக்கு பிறகு காரணமாக ஏகப்பட்ட யூகங்கள் சொல்லப்பட்டன.

இந்நிலையில் சமந்தா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து சமயம் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில்,

“எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட், வாழ்க்கை வீணாக போய்விட்டது, சமந்தாவை யூஸ் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அப்போது எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

இந்தப் பிரச்னை என்பது எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.

அந்த சமயத்தில் நான் கொஞ்சம் டவுனாகத்தான் இருந்தேன். அதற்காக என்ன செய்ய முடியும் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டா இருக்க முடியும். சரி நடந்தது நடந்துவிட்டது வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

அதையும் நான் பழிவாங்குவதற்காக வாழ்ந்துகொண்டிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அர்த்தம் இல்லை. நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இவ்வளவு பிரச்னைக்கு பிறகும் என்னுடன் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்றார்.

(Visited 38 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!