இலங்கை செய்தி

சஜித்தின் மாநாடு திடீரென ஒத்திவைப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேக தலைவருமான திரு.சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த கூட்டு சுகாதார சங்கத்தின் மாநாடு இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இருபது சுகாதார வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டதே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு காலை 09.00 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது, ஆனால் 10.30 மணி வரை தொடங்குவதற்கு போதிய ஆட்கள் இல்லாததால் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் சுகாதார நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு பிற்போடப்பட்டதாகவும், மீண்டும் நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!