இந்தியா

மணிப்பூர் விவகாரம்! மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட தகவல்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.

இதனால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளித்து இரு அவைகளிலும் மணிப்பூர் தொடர்பான அறிக்கையை சமர்பிப்பார் என்றும் அவர் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)
See also  புனேவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் பொறியாளர்கள் பலி
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content