பொழுதுபோக்கு

இலங்கையரை திருமணம் முடித்த ரம்பாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?

தனது 15 வயதில் மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவின் முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். தொடர்ந்து அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார்.

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆன அவர் அதன் பின் தெலுங்கில் நடித்தார். அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துவிட்டதாம்.

தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!