பொழுதுபோக்கு

அரண்மனை வரிசையில் வருகின்றது காஞ்சனா – 4… லாரன்ஸ் எடுக்கப்போகும் அவதாரம்

லாரன்ஸ் இயக்குவதையே ஒத்தி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர்.

சந்திரமுகி 2, ருத்ரன் ஆகிய இரண்டு படங்களுக்குமே ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து ஃபெயிலியராக அமைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மரண ஹிட் அடித்தது இப்பொழுது அதிகாரம், துர்கா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் வெளியாகி சக்க போடு போட்டது. இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்தது.

இந்த படத்தின் வெற்றி ராகவா லாரன்ஸின் ஆசையை தூண்டி உள்ளது. அவரிடமும் கையில் அட்சய பாத்திரம் போல் காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் இருக்கிறது.

இப்பொழுது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அந்த அட்சய பாத்திரத்தை மீண்டும் கையில் எடுக்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் காஞ்சனா 4, முனியின் ஐந்தாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இதனை கூலி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில்கேட்டு அறிந்த ரஜினி காந்த் வாழ்த்துக்களையும், திலகத்தையும் இட்டு அனுப்பி உள்ளார். ஏற்கனவே காஞ்சனா மூன்று பாகங்களும் நல்ல ஒரு வசூலை பெற்று தந்தது.

காஞ்சனா படம் என்று சொன்னாலே வியாபாரத்திற்காக போட்டி போட்டு வருவார்கள். இப்பொழுது காஞ்சனா நான்காம் பாகத்தை ஆரம்பித்து விட்டார் என்றால் லாரன்ஸ் காட்டில் பணமழை தான்.

muஅர

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!