வாழ்வியல்

மூளையை பாதிக்கும் கதிர்வீச்சு – கையடக்க தொலைபேசி தொடர்பில் எச்சரிக்கை

இன்றைய நிலையில் செல்போன் இல்லாமல் மக்களின் வாழ்க்கை முடங்கி விடும் நிலை உள்ளது. நாம் எங்கு சென்றாலும் முதலில் எடுத்துக் கொள்ள நினைப்பது நம் கைபேசியைத்தான். மொபைல் போன்கள் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளாகிவிட்டன. அதிலும், இப்போது பெரும்பாலானோர், தங்கள் மொபைல் போன்களுடன் கழிப்பறைக்குச் செல்கிறார்கள்.

நாம் போகும் எல்லா இடங்களுக்கும் கைபேசியை எடுத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், அது உங்களுக்குப் பல வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே சமயம் பலர் இரவு வெகுநேரம் வரை மணிக்கணக்கில் மொபைலைப் பயன்படுத்திவிட்டு தூங்கியவுடன் போனை தலையணைக்கு அருகில் வைத்துவிட்டு தூங்குகிறார்கள். தலையணைக்கு அருகில் கைபேசியை வைத்துக்கொண்டு தூங்கும் தவறை ஒருபோதும் செய்யக்கூடாது. இதனால் உங்களுக்கு பல இழப்புகள் ஏற்படலாம்.

இரவில் தூங்கும் போது மொபைலை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உங்கள் மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்களது மூளைத் திறன் பாதிக்கப்படுவதோடு (Brain Health), ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் வரலாம். என்கின்றனர்.

மொபைல் போன்களின் பயன்பாடு மிக அதிகமாகிவிட்ட நிலையில், அது நேரடியாக நம் ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இது நம் வாழ்வில் மன அழுத்தத்திற்கு காரணமாகவும் மாறத் தொடங்கியுள்ளது. அதே சமயம் இரவில் தலையணைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக்கொண்டு தூங்கினால், உடனே இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் இந்த பழக்கம் உங்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது போன்ற சூழ்நிலையில், தூங்கும் போது மொபைல் போன் நம்மிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் தூங்கும் அறையில் மொபைல் போனை வைக்காமல் இருந்தால் நல்லது. அப்படி சாத்தியமில்லை என்றால், நீங்கள் தூங்கும் மூலையின் மறு மூலையில் உங்கள் மொபைல் போனை வைக்கலாம். ஆனால் சில காரணங்களால் உங்கள் மொபைலை உங்களுடன் வைத்துக்கொண்டு தூங்க விரும்பினால். அதை ஏர் பிளேன் மோடு என்னும் விமானப் பயன்முறையில் வைக்க மறக்காதீர்கள். இதனுடன், தொலைபேசியை தலையணையின் அருகே தவறுதலாக கூட வைக்க வேண்டாம். தலையணைக்கு அருகில் போனை வைத்து தூங்குவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. மன அழுத்தம் அதிகரிக்கும்

உங்கள் தலையணைக்கு அருகில் உங்கள் தொலைபேசியை வைத்து தூங்குவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதனுடன் காலையில் தலைவலியும் வரலாம். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு உங்கள் மூளையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

2. தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்

உங்கள் மொபைலை விமானப் பயன்முறையில் வைக்கவில்லை என்றால், திரும்பத் திரும்ப வரும் மெசேஜ் டோன்களால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். தூக்கமின்மை காரணமாக, நீங்கள் காலையில் சோர்வாக உணரலாம்.

3. மைக்ரேன் பிரச்சனை

இரவில் படுக்கைக்கு அருகில் போனை வைத்துக்கொண்டு தூங்குவது ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகளை பெரிதும் அதிகரிக்கிறது. இதனுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, நீங்கள் இரவில் தூங்கும் முன் மொபைல் போன்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content