இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி

‘சுபீட்சமான நாடு மற்றும் அழகான வாழ்வு’ என்ற கருத்தினைப் பின்பற்றும் தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையினால் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக எதிர்காலத்தில் சட்டத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், நெருக்கடிகளை அரசாங்கம் ஒருபோதும் இனவாத மனப்பான்மையுடன் பார்க்காது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.

(Visited 32 times, 2 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content