தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் இன்றைய தினம் (26) மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்(CNN) செய்தி வெளியிட்டுள்ளன.
பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொடிய எல்லை மோதல்களைத் தொடர்ந்து கையெழுத்திடப்பட்ட ஒரு போர் நிறுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
(Visited 7 times, 7 visits today)





