பாகிஸ்தானின் முன்னாள் உளவுத் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பாகிஸ்தான்(Pakistan) உளவு அமைப்பின்(spy agency) முன்னாள் தலைவருக்கு அரசு ரகசியங்களை மீறியதற்காகவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீத்(Faiz Hameed), அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் தவறான நபர்களுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாளி என ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2019 முதல் 2021 வரை முன்னாள் பிரதமரும் PTI தலைவருமான இம்ரான் கானின்(Imran Khan) அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியுள்ளார்.
“நீண்ட மற்றும் கடினமான சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான ஃபைஸ் ஹமீத், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தால் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்” என்று ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




