உலகம் செய்தி

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வந்ததும் ஏவுகணை விட்டு எச்சரித்த வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, வட கொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடலில் செலுத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய இராணுவங்கள் தெரிவித்துள்ளன.

நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக ஒரு அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரிய துறைமுகத்திற்கு வந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஏவுகணைகளும் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச போர் விதிகளை மீறி வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு தென் கொரியாவும் ஜப்பானும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!