ஆஸ்திரேலியா

நியூசிலாந்து சூட்கேஸ் கொலை வழக்கு: உயிரிழந்த குழந்தைகளின் தாயார் குற்றவாளி எனத் தீர்ப்பு

மது இரு குழந்தைகளையும் கொன்று பயணப்பெட்டியில் மறைத்து வைத்ததாக நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அப்பெண் குற்றவாளி எனச் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 23) தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஹாக்யூங் லீ ,நியூசிலாந்துக் குடியுரிமை கொண்ட தென்கொரியராவார்.

தென்ஆக்லாந்தில் உள்ள கிடங்கு ஒன்றில் அவர் விட்டுச் சென்ற பயணப்பெட்டிகளில் குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 2022ஆம் ஆண்டில் தென்கொரியத் தலைநகர் சோலிலிருந்து லீ ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

உயிரிழந்த குழந்தைகளான யூனா ஜோவும் மீனு ஜோவும் கொலையுண்டபோது அவர்களுக்கு முறையே எட்டு மற்றும் ஆறு வயது.அவர்கள் மரணம் அடைந்து கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

2017ஆம் ஆண்டில் லீயின் கணவர் மரணமடைந்ததாகவும் அதையடுத்து அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படக்கூடாது என்று அவர்கள் வாதிட்டனர்.ஆனால், தமது குழந்தைகளைக் கொன்றபோது லீ சுயநினைவுடன்தான் இருந்தார் என்றும் அதைத் தெரிந்தேதான் அவர் செய்தார் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.

உடல்களைப் பயணப்பெட்டிகளில் மறைத்துவைத்து, பிறகு நாட்டைவிட்டு தப்பிச் சென்றது இதைக் காட்டுவதாக அவர்கள் வாதிட்டனர்.லீக்கு நவம்பரில் தண்டனை விதிக்கப்படும்

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித