ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்காக நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்
ஆஸ்திரியாவின்(Austria) பாராளுமன்றத்தின் கீழ் சபை, பாடசாலைகளில் முஸ்லிம் தலையை மறைக்கும் துணி(headscarves) அணிவதற்கான தடையை நிறைவேற்றியுள்ளது.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அனைத்து பாடசாலைகளிலும் “இஸ்லாமிய மரபுகளின்படி தலையை மறைக்கும்” துணியை அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சட்டமியற்றுபவர்கள் புதிய சட்டத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சட்டத்தை மீறினால் 150 முதல் 800 யூரோக்கள் வரை அபராதம் ($175-930) விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில், ஆரம்பப் பாடசாலைகளில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு தலைக்கவசம் அணிவதற்கான தடையை நாடு அறிமுகப்படுத்தியது, ஆனால் அரசியலமைப்பு நீதிமன்றம் அடுத்த ஆண்டு அதை ரத்து செய்தது.
இது முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதால் சட்டவிரோதமானது என்றும், மத ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டிய அரசின் கடமைக்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தது.




