இலங்கை

வாக்குமூலம் வழங்க அழைக்கப்படும் தரப்பினருக்கான புதிய சுற்றறிக்கை: பொலிஸ் மா அதிபர்

முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு காவல் நிலையத்துக்கு அழைக்கப்படும் தரப்பினருக்கு, தொடர்புடைய முறைப்பாட்டின் உள்ளடக்கம் குறித்து அறிவிப்பதனை கட்டாயமாக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

வலுசக்தி துறை தொடர்பான ஆர்வலர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்கு வருகைதருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிட மறுத்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!