பொழுதுபோக்கு

“நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது நடந்துவிட்டது” மியா ஜார்ஜ்….

தமிழில் அமரகாவியம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ்.

தொடர்ந்து ஒருநாள் கூத்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மலையாள திரையுலகில் சக நடிகைகளை தனது நட்பு வட்டாரத்தில் அதிக அளவில் வைத்திருக்கும் மியா ஜார்ஜ் தொடர்ந்து அவர்களுடன் விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நட்பை பலப்படுத்த தவறுவதில்லை.

அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை நடிகை பாவனாவுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார் மியா ஜார்ஜ். பாவனாவுடன் தானும் தனது மகனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மியா ஜார்ஜ்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இந்த கெட் டுகெதர், தீபாவளி அன்று மாலை அமைந்தது. ஒவ்வொரு தீபாவளியிலும் நினைத்துப் பார்க்கக் கூடிய மாலை பொழுதாக இது அமைந்து விட்டது. பாவனா நம்மை சுற்றி இருக்கும் போது ஒரு நொடி கூட ‘டல்’ ஆக இருக்காது. அன்பையும் சிரிப்பையும் பரப்புங்கள் டியர்” என்று கூறியுள்ளார்.

டாக்டர் லவ், ஹலோ நமஸ்தே உள்ளிட்ட சில படங்களில் பாவனாவும் மியா ஜார்ஜும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்