இலங்கை செய்தி

கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர போராட்டம்

நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக இரண்டு ஸ்கைலிப்ட் (Skylift) வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும், தீ விபத்துக் காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த ஸ்கைலிஃப்ட் வாகனங்களைப் பயன்படுத்திச் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை