பொழுதுபோக்கு

“தாலியை கழட்ட மாட்டேன்…” மாரிமுத்துவின் மனைவி அதிரடி முடிவு

எதிர்நீச்சல் சீரியல் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் மாரிமுத்து. அவர் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தாலும், அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

இந்த சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் என்கிற கேரக்டருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் அவர் பேசிய, டயலாக்குகள் எல்லாம் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகின. குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் வேறலெவலில் ரீச் ஆனது.

இப்படி எதிர்நீச்சல் சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற மாரிமுத்துவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருந்தன. அண்மையில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த அவர், பின்னர் கங்குவா, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களையும் கைவசம் வைத்திருந்தார்.

இப்படி சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பிசியாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரை என ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சென்னையில் இருந்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட மாரிமுத்துவின் உடல், அங்குள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் மறைவால் துவண்டு போய் உள்ள அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போதே தன் மனைவியின் மீதுள்ள காதலை பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்தி உள்ளார். தற்போது கணவனை இழந்த பின்னர் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி ஒரு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

பொதுவாக கணவன் இறந்துவிட்டால் பெண்கள் தாலியை கழட்டி விடுவார்கள். ஆனால் மாரிமுத்துவின் மனைவி தாலியை கடைசிவரை கழட்டவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறாராம்.

தன் கணவரின் நினைவாக எப்போது தாலியை அணிந்திருக்க போவதாகவும், அது தன்னிடம் இருந்தால் தன் கணவரே தன்னுடன் இருக்கும் ஓர் உணர்வு இருப்பதன் காரணமாக மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். அவரின் இந்த துணிச்சலான முடிவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content