இலங்கை

வடக்கில் பௌத்த மயமாக்கல் – இந்தியா உதவாது என மனோ கணேசன் தெரிவிப்பு!

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டில் தோன்றிய பௌத்தத்தை மற்ற இடங்களிலும் வளர வேண்டும் என்றே இந்தியா விரும்பும் என்பதனால் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவதற்கு பதிலாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளூர் நடவடிக்கைகளை எடுக்க தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியா – வெடுக்குநாரி ஆதிசிவன் கோவிலின் சிவலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு,  கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் பௌத்த மயமாக்களை நிறுத்த கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக் கோரி தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்