பொழுதுபோக்கு

பொது இடத்தில் நடிகையைப் பார்த்து ஆபாச சைகை காட்டிய சூப்பர் ஸ்டார்.. குவியும் கண்டனம்

மலையாள நடிகர் மோகன்லால் தற்போது பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர், நடிகை ஒருவர் நடனமாடிய போது, ஆபாசமாக சைகை காட்டியது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக புகார் கூறிவருகின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

நடிகைகள் புகார் கூறியதை அடுத்து, AMMA சினிமா நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்டவர்கள் எந்த கருத்தையும் கூறாமல், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பதில் கூறவேண்டியது அம்மா’ அமைப்பு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த சினிமாத்துறையும் பதிலளிக்க வேண்டும்.

என்னை நோக்கி அதிக கேள்விகள் வருகின்றன, வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்துதான் அம்மா’ அமைப்பின் பதவியில் இருந்து விலகினேன். கூகுள் மீட் மூலம் அனைவரிடத்திலும் பேசிவிட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மலையாள சினிமா தகர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மலையாள சினிமாவை குறிவைத்து இந்த துறையை மொத்தமாக தகர்க்க பார்க்கிறார்கள், நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்று பேசி இருந்தார்.

இப்படி மோகன்லால் குறித்து சர்ச்சை ஒருபக்கம் சென்று கொண்டு இருக்கும் நிலையில், கலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருக்க அதில், பிரபல நடிகரின் மகள் நடனமாடிக்கொண்டு இருக்க, முதல் வரிசையில் அமர்ந்து இருந்த மோகன்லால் ஆபாசமாக அசிங்கமாக கையால் சைகைகாட்டி இருந்தார்.

அந்த வீடியோ இப்போது, சர்ச்சையானதை அடுத்து, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பொது இடத்தில், மகள் வயது நடிகை ஒருவர் நடனமாடும் போது, இப்படி கீழ்த்தனமாக நடந்து கொண்ட, நீங்கள் எப்படி, அம்மா சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருந்தீர்கள் என சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content