இலங்கை விளையாட்டு

LPL – இறுதிப்போட்டிக்கு கண்டி மற்றும் தம்புள்ள அணிகள் தேர்வு

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி- லவ் கென்டி அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று (19) இடம்பெற்ற ‘பி லவ் கென்டி’ அணிக்கும் கோல் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணியை 34 ஓட்டங்களால் வீழ்த்தி பி லவ் கென்டி அணி இவ்வாறு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ‘பி லவ் கென்டி’ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணித்தலைவர் வனிந்து ஹசரங்க 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

தினேஷ் சந்திமால் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களை எடுத்தார்.

கோல் டைட்டன்ஸ் அணி சார்பாக லஹிரு குமார மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி, பதில் இன்னிங்ஸுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ‘கோல் டைட்டன்ஸ்’ அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி, LPL போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ‘தம்புள்ள அவுரா’ அணி மற்றும் ‘பி லவ் கென்டி’ அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.

(Visited 27 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்