நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 31 பேர் பலி!

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறி ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நைஜர் (Niger) மாநிலத்தின் பிடா (Bida) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமீபத்திய மாதங்களில், நைஜர் மாநிலத்தில் கனரக லொறிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான சாலைகள் மற்றும் ரயில் நெட்வொர்க் இல்லாததே காரணம் என்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.