ஆர்த்தியின் மறைமுக பதிவால் கடுப்பான கெனிஷா

இணையத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் தலைப்பு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை குறித்து தான்.
இரு தரப்பினரும் தன் பக்கம் இருக்கும் விஷயங்களை பேசி வரும் நிலையில், நேற்று ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து மறைமுகமாக பதிவு செய்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க, கெனிஷா தன்னைப் பற்றியும் ரவி மோகன் குறித்தும் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த எல்லா பதிவுகளையும் ஸ்டோரிகளையும் கெனிஷா டெலிட் செய்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
(Visited 2 times, 2 visits today)