செய்தி விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019 அக்டோபர் முதல் BCCI கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ICC தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020ம் ஆண்டு நவம்பர் 24ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை.ICC சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ICC தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ICC தலைமை பதவி வகித்தனர்.

அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ICC தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content