போண்டி துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற கடற்கரையில் இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி!
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போண்டி கடற்கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நான்கு நாள் விஜயமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், போண்டி தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
“ஒரு யூதர் காயமடைந்தால், அனைத்து யூதர்களும் தங்கள் வலியை உணர்கிறார்கள்,” என்று கூறிய அவர், துக்கமடைந்த குடும்பங்களை அரவணைத்து ஆறுதல்படுத்த” அங்கு வருகை தந்ததாக கூறினார்.
அத்துடன் இந்த விஜயத்தின்போது கான்பெர்ரா மற்றும் மெல்போர்னுக்கு செல்லும் அவர், பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Anthony Albanese) சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





