பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

40 வயதை கடந்தும் தரைத்துறையில் மின்னும் நடிகை திரிஷா கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது. இவருக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டது.

விரைவில் த்ரிஷா வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

மேலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்த நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு இவர் மட்டுமே ஆட்சி செய்து வந்தார்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாக த்ரிஷாவின் மார்க்கெட் மொத்தமாய் சரிந்து விட்டது. த்ரிஷா இனி அவ்வளவுதான், மீண்டும் அவரால் வரவே முடியாது. சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த கதாநாயகிகளுக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் ஒன்று இவருக்கு கிடைத்தது. இதுவரை தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற்ற நடிகைகள் என்று யாருமே கிடையாது.

த்ரிஷா தான் முதன் முதலில் கைவிட்டுப் போன மார்க்கெட்டை திரும்பப்பெற்றதோடு, மீண்டும் நம்பர் ஒன் நடிகை ஆக மாறி இருக்கிறார். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் லியோ, விடாமுயற்சி, கே ஹெச் 234 என வளர்ந்து கொண்டே போகிறது. இப்போதைக்கு டபுள் டிஜிட்டில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் ஆக இவர்தான் இருக்கிறார்.

மீண்டும் த்ரிஷா ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இவருடைய திருமண செய்தி வெளி வந்து கொண்டிருக்கிறது.

மலையாள திரை உலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது. த்ரிஷா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவி ப்பு வெளியாகவில்லை.

 

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்