பொழுதுபோக்கு

ஜெயம் ரவிக்கும் ரஜினிகாந்த் மகளுக்கும் திருமணம்? இறுதியில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர்களில் ஒருவர்தான் ஜெயம் ரவி.

2003 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான, ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் முதல் படமே இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி – மோகன் ராஜா காம்போவில் வெளியான ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ திரைப்படமும் தரமான வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்தது.

இதை தொடர்ந்து தாஸ், மழை, இதய திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், போன்ற வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு.. பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இதுவரை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்றாலும், இந்த விஷயம் குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் இந்த விவாகரத்துக்கு காரணம் என பல வதந்திகள் பரவி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஜெயம் ரவி ஆர்த்தியை திருமணம் செய்ய வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை தான் திருமணம் செய்து கொண்டிருப்பார் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் காதலுக்கு காரணமாக இருந்தவரே நடிகை குஷ்புதான். ஜெயம் ரவிக்கும் ரஜினியின் மகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் சில பேச்சுகள் நடந்ததாகவும், ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து வந்ததாலும், ஜெயம் ரவி பார்ப்பதற்கு சார்மிங்காக இருந்ததாலும் ஆர்த்தியின் அம்மா சுஜாதா இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாக இருந்ததாக கூறியுள்ளார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அடுத்தடுத்து பல தகவல்களை கூறி வரும் சபிதா ஜோசப் கூறியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content