ஆங்கில தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர்கள் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை
இந்தியாவைச் சேர்ந்த உள்ளிட சர்வதேச மாணவர்கள் குழு, ஆங்கில சோதனை ஊழலைத் தொடர்ந்து தங்கள் விசாக்களை ரத்து செய்ததற்கு எதிராக செயல்படுமாறு பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு பிபிசி பனோரமா விசாரணையில், விசாக்களுக்குத் தேவைப்படும் கட்டாய மொழிப் பரீட்சைக்காக இங்கிலாந்தின் இரண்டு சோதனை மையங்களில் சில ஏமாற்று வேலைகள் நடந்ததாகக் காட்டியபோது, இந்தப் பிரச்சினை 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பிரித்தானியா அரசாங்கம் அத்தகைய மையங்கள் மீது […]













