அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

ஐரோப்பா செய்தி

ukவின் புதிய உளவுத்துறை தலைவருடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிகாரி!

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் MI6 உளவுத்துறை தலைவராக பதவியேற்ற பிளேஸ் மெட்ரெவேலி (Blaise Metreweli)   ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரியுடன் “நீண்ட” தொலைபேசி உரையாடலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஊடகங்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி செர்ஜி நரிஷ்கின் (Sergey Naryshkin) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் லண்டனில் அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றினர் என்றும், SIS அதிகாரிகள் மொஸ்கோவில் அதையே செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இருப்பினும் தொலைபேசியில் பேசப்பட்ட விடயங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

  • December 19, 2025
  • 0 Comments

500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியை பெறும் நோக்கிலேயே குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரியவால் நேற்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்பகல் முதல் மாலைவரை பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பின்றி குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை சுற்றுலாத்துறை இந்த ஆண்டில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்  (SLTDA)  குறிப்பிட்டுள்ளது. இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2,196,624 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து குறிப்பிடத்தக்க சுற்றுலாப் பயணிகள்  […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டியின் (Rachida Dati) வீட்டில் சோதனை!

  • December 19, 2025
  • 0 Comments

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி (Rachida Dati) ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2011 க்கு இடையில்  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரச்சிடா டாட்டி எரிசக்தி குழுவான GDF சூயஸிடமிருந்து €300,000 இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என […]

TikTok USDS Joint Venture deal between ByteDance and Oracle to lift US ban. அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

டிக்டாக் (TikTok )அமெரிக்கத் தடைக்கு முற்றுப்புள்ளி: புதிய கூட்டு நிறுவனம் உதயம்!

  • December 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கைத் தொடர்ந்து இயக்குவதற்காக, அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைவதற்கான. ஒப்பந்தங்களில் (Binding Agreements) கையெழுத்திட்டுள்ளதாக டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஷௌ ஜி செவ் (Shou Zi Chew) வியாழக்கிழமை (டிசம்பர் 18, 2025) தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளைக் கவனிக்க “TikTok USDS Joint Venture LLC” என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் இதன் பங்குதாரர்கள் யார் யார் என்று அறிவித்துள்ளனர். ஆரக்கிள் (Oracle), சில்வர் […]

இலங்கை செய்தி

2026இல் 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் இலங்கை!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டிற்கு இணையாகவும், அடுத்த ஆண்டில் IMF கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் மூத்த அமைச்சர் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தியிடம் குறிபிட்டுள்ளார். டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மறுசீரமைப்பு வளர்ச்சியினால் இந்த வேகம் உந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிட்வா சூறாவளியினால்  22 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்கவும் 07 பில்லியன் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

  • December 19, 2025
  • 0 Comments

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வந்தே […]

இலங்கை செய்தி

257,000 குடும்பங்களுக்கு 25,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது

  • December 19, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25,000 ரூபா மானியம்,பாதிக்கப்பட்டுள்ள 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இன்று (19.)இதனைத் தெரிவித்தார். மொத்த ஒதுக்கீட்டான 17.6 பில்லியன் ரூபாவில் இதுவரை 6.4 பில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புயலால் 610,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 493,000 குடும்பங்கள் 25,000 ரூபா முதற்கட்ட மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மேலும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு €90 பில்லியன் நிதியுதவியை வழங்க ஒப்புதல்!

  • December 19, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுக்கு €90 பில்லியன் (£78.8 பில்லியன்) நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று ஒன்றுக்கூடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உக்ரைனின் இராணுவ மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வட்டியில்லாத கடனாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. உதவி தொகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றிக் […]

error: Content is protected !!