செய்தி விளையாட்டு

அகமதாபாத் டி20: 231 ரன்கள் குவித்து இந்தியா அபார வெற்றி

  • December 20, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்களால் வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, திலக் வர்மாவின் 73 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 231 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய […]

இலங்கை செய்தி

23 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தாள் “உடரட்ட மெனிக்கே”!

  • December 20, 2025
  • 0 Comments

டித்வா புயலையடுத்து 23 நாட்களாக தடைபட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவை இன்று மீள ஆரம்பமானது. பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதையே பயணத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவால் மலையக ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன. அவற்றை புனரமைப்பதற்குரிய பணிகள் இடம்பெற்றுவருகின்றன. முதற்கட்டமாக பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சர்வமத வழிபாட்டுடன் “உடரட்ட மெனிக்கே” ரயில் பதுளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மலையக […]

உலகம் செய்தி

தைபேயில் கத்திக் குத்துத் தாக்குதல்: 3 பேர் பலி, 11 பேர் காயம்

  • December 20, 2025
  • 0 Comments

தாய்வான் தலைநகர் தைபேயில் நேற்று மாலை கூரிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 27 வயதான சாங் வென் என்ற சந்தேக நபர், தைபேயின் பிரதான மெட்ரோ நிலையத்தில் முதலில் புகை குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஷாப்பிங் பகுதியில் உள்ள மற்றொரு நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகக் கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலை அடுத்து, அந்த நபர் ஆறு […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய நிழல் கடற்படை கப்பல் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் ரஷ்ய “நிழல் கடற்படை” எண்ணெய் டேங்கரான கென்டிலைத் தாக்க முதன் முறையாக  வான்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன்  கூறியுள்ளது. SBU பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தினார். லிபியாவின் கடற்கரையிலிருந்து  2,000 கி.மீ.க்கு தொலைவில் இருந்த கப்பலை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும் பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இதன்மூலம் பெறப்படும் நிதி போரை தொடர்ந்து […]

இந்தியா உலகம் செய்தி

அசாமில் பயங்கரம்: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி

  • December 20, 2025
  • 0 Comments

அசாம் மாநிலம் ஹொஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று அதிகாலை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயில், யானைகள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் இயந்திரம் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என இரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 2.17 மணியளவில் […]

உலகம் ஐரோப்பா செய்தி

லண்டன் கிறிஸ்துமஸ் தினக் கொலை: அந்தோணி கில்ஹீனி குற்றவாளி எனத் தீர்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி, ஒருவரைக் கொலை செய்தும் மேலும் பலரைக் காயப்படுத்திய நபர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2024 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பில் மெற்றோபொலிட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, 31 வயதான அந்தோணி கில்ஹீனி (Anthony Kilheeny) என்பவர் […]

உலகம் செய்தி

முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்க ஜனாதிபதி!

  • December 20, 2025
  • 0 Comments

ஒன்பது பெரிய மருந்து நிறுவனங்கள், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் அதே தள்ளுபடி விலையில் தங்கள் முதன்மை மருந்துகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அம்ஜென் (Amgen), பிரிஸ்டல்-மையர்ஸ்-ஸ்குயிப் (Bristol-Myers-Squibb) மற்றும் ஜிஎஸ்கே (GSK)  உள்ளிட்ட  நிறுவனங்கள், அமெரிக்க உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 150 பில்லியன் டொலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சி, அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக மருத்துவ உதவி பெறுபவர்களுக்கு, மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் […]

அரசியல் இலங்கை செய்தி

சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!

  • December 20, 2025
  • 0 Comments

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. “தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. […]

உலகம் செய்தி

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியேறும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)!

  • December 20, 2025
  • 0 Comments

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro), குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று சிறையில் இருந்து வெளியேற அனுமதி பெற்றுள்ளார். கூட்டாட்சி காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து  பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் (Alexandre de Moraes)  அனுமதி வழங்கியுள்ளார். ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) குடலிறக்கம் காரணமாக இரண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சிமீது சர்வதேசம் நம்பிக்கை: தொடரும் உதவி!

  • December 20, 2025
  • 0 Comments

“ஊழல், மோசடி அற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது அனைத்துலக சமூகத்துக்கு நம்பிக்கை இருப்பதால், இலங்கை மீண்டெழுவதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.” இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன. அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய […]

error: Content is protected !!