அரசியல் இந்தியா செய்தி

இலங்கையை மீளக்கட்யெழுப்ப 450 மில்லியன் டொலர்களை வழங்குகிறது இந்தியா!

  • December 23, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய நிதி உதவி திட்டத்தை இந்தியா இன்று (23) அறிவித்துள்ளது. இதற்கமைய 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 350 மில்லியன் டொலர் சலுகை கடனாகவும், 100 மில்லியன் டொலர் கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (22) மாலை இலங்கை வந்தடைந்தார். இன்று (23) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு

  • December 23, 2025
  • 0 Comments

“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபை […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!

  • December 23, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர். இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் நடப்பது வேறு: மஹிந்த அணி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக எழுந்து நிற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “யாழ்ப்பாணத்தில் இராணுவ வசம் இருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுவிட்டது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்ப முற்படக்கூடாது. சிங்கள, பௌத்த மக்கள் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக போராட்டம் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயம்

  • December 22, 2025
  • 0 Comments

தென்கிழக்கு பிரெஞ்சு(France) நகரமான லியோனுக்கு(Lyon) அருகிலுள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த நேரத்தில் உள்ளூர்வாசிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் நகர மேயர் தெரிவித்துள்ளார். “வெடிப்பின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஆலையை வைத்திருக்கும் நோர்வே(Norwey) ரசாயன நிறுவனமான எல்கெம்(Elkem) குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

பிரித்தானிய சிறைகளில் உண்ணாவிரதம் இருந்த இரண்டு பாலஸ்தீன போராளிகள் மருத்துவமனையில் அனுமதி

  • December 22, 2025
  • 0 Comments

குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பரின் கூற்றுப்படி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பாலஸ்தீன(Palestine) போராளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லண்டனில்(London) உள்ள பென்டன்வில்(Bentonville) சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 வயது கம்ரான் அகமது(Kamran Ahmed) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சகோதரி ஷாஹ்மினா ஆலம்(Shahmina Alam) அல் ஜசீராவிடம்(Al Jazeera) குறிப்பிட்டுள்ளார். சர்ரேயில்(Surrey) உள்ள பிரான்ஸ்ஃபீல்டில்(Bransfield) 50 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த 30 வயதான அமு கிப்(Amu Gibb) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனத்திற்கான கைதிகள் குழுவும் […]

error: Content is protected !!